1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sasikala
Last Modified: சனி, 1 ஏப்ரல் 2017 (11:14 IST)

ராஜநாகம் கக்கிய நாக மணி அதிர்ச்சியடைய வைத்த சாமியார்!

கர்நாடக மாநிலம் சிக்பல்லபூரை அடுத்த குடிபண்டே பகுதியில் உள்ள சவ்டேஷ்வரில் உள்ள கோவில் ஒன்றில் சாமியாராக  இருக்கிறார் பிரஷாந்த் வயது 35. அவர் காட்டில் இருந்து ஒரு பாம்பை அதன் பல்லை பிடிங்கி கொண்டு வந்தார். அதனை ராஜநாகம் என்று அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார்.

 
 
பக்தர்களிடம் ஒளிரும் கல்லை வைத்து நாகமணி என்று கூறி அனைவரிடமும் பணம் பறித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, அங்கு பாம்பு நிபுணர் பிரித்விராஜை வைத்து சோதித்த போது அது ராஜநாகமே இல்லை என்பதும்,   அதேபோல் நாகமணியும் போலி என்று தெரியவந்தது.
 
இதனை அடுத்து, காவல்துறையிடம் புகார் அளித்ததின் பேரில் பிரஷாந்தை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.