வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 5 ஏப்ரல் 2016 (10:08 IST)

வெளிநாட்டு பெண்ணின் ஆடையை கிழித்து துன்புறுத்தி, அவரது காதலனை தாக்கிய ராஜஸ்தான் கும்பல்

ராஜஸ்தான் மாநிலம் புஷ்காரில் ஸ்பெயின் நாட்டு ஜோடியை தாக்கிய கும்பல், அந்த இளம் பெண்ணின் ஆடைகளைக் கிழித்து துன்புறுத்தி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


 

 
ராஜஸ்தான் மாநிலம் புஷ்காருக்குச் சென்ற ஸ்பெயின் நாட்டு பெண், உள்ளூர் மக்களால் தொந்தரவுக்கு உள்ளானதாக குற்றம் சாட்டியுள்ளார்.
 
அவருடன் சென்ற அவரது ஆண் நண்பரையும் உள்ளூர் மக்கள் கல்லால் அடித்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். 
 
இது குறித்து தாக்குதலுக்கு உள்ளான பெண் கூறுகையில், "நாங்கள் வாடகைக்கு பைக் எடுத்து புஷ்காரில் உள்ள கோவில்களுக்குச் சென்றோம்.
 
அங்கிருந்த உள்ளூர் ஆண்கள் கும்பல் என்னிடம் தவறாக நடந்துக் கொண்டனர். அவர்கள் என்னுடைய பையை பறித்துக் கொண்டனர். எனது ஆடையையும் கிழித்தனர் என்று கூறியுள்ளார்.
 
அந்த கும்பலின் இந்த செயலை தடுக்க முயன்ற நண்பரை அவர்கள் கல்லால் அடித்ததாகவும் குற்றம் சாற்றியுள்ளார்.
 
இந்நிலையில், பாதிக்கப்பட்ட அந்த வெளிநாட்டு ஜோடி தங்கியிருந்த ஹோட்டலின் மானேஜர் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
 
அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 
இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் வாக்குமூலத்தைப் பெற்று விசாரணை நடத்த அவர்கள் முயன்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.