1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 10 அக்டோபர் 2015 (11:09 IST)

குஜராத்திலுள்ள சோம்நாத் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறையினர் தீவிர சோதனை

குஜராத் மாநிலத்திலுள்ள சோம்நாத் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
 
சோம்நாத் கோவிலுக்ககு, ஆண்டுதோறும் பல லட்சம்  பக்தர்கள் வருகின்றனர். அந்நிலையில், இந்த கோவில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்ற கோவிலின் அறக்கட்டளைக்கு மிரட்டல் கடிதம் வந்தது. அந்த கடிதம், இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் பெயரில், குஜராத்தி மொழியில் எழுதப்பட்டிருந்தது.
 
இதைத் தொடர்ந்து, கோவிலின் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை.
 
இதுகுறித்து, காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கோவில் அமைந்துள்ள பகுதிகளில் கால்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த கோவில், கடற்கரை பகுதியில் அமைந்துள்ளதால், கடலோர பாதுகாப்பு படை காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.