வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2015 (14:12 IST)

ஆறு வயது சிறுமியை பலாத்காரம் செய்த 35 வயது ஆண்: டெல்லியில் தொடரும் பலாத்கார சம்பவங்கள்

டெல்லி மேற்கு பகுதியில் உள்ள ஒரு ஆறு வயது சிறுமியை அவரது அண்டை வீட்டில் உள்ள 35 வயதான ஒருவர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறையில் பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் 35 வயதான தொழிலாளி ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

அசோக் குமார் என்ற அந்த நபர் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுமியை அருகிலுள்ள ஒரு காட்டிற்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மயக்கமடைய நேரிட்டபோது அவர் அந்த சிறுமியை புதரின் அருகில் விட்டுவிட்டு அப்படியே தப்பித்துள்ளார் என காவல் துறை அதிகாரி தெரிவித்தார்.

மறுநாள் நடைப்பயிற்சி செய்ய அப்பகுதிக்கு சென்ற துணை இராணுவ ஜவான்கள் அந்த சிறுமியை காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது அந்த சிறுமி ஆபத்து நிலையை தாண்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பலாத்காரம் செய்த நபர் அந்த சிறுமியின் குடும்பம் வசிக்கும் பாபா ஹரிதாஸ் நகரில் கட்டுமான பணி செய்து வருபவர் என அவரை கைது செய்த காவல் துறையினர் தெரிவித்தனர்.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த அசோக் குமார் போதை பழக்கத்தால் ஏற்கனவே அவரது கிராமத்தில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட அசோக் குமார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

நாட்டின் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் பலாத்கார சம்பவங்கள் அதிகமாகவே நடக்கிறது. நான்கு வயதோ, ஆறு வயதோ எதயும் பார்ப்பதில்லை இந்த காமுகர்கள். தொடரும் இந்த பலாத்கார கலாச்சாரம் நம்மை மேன்மேலும் உலக நாடுகள் முன்னிலையில் தலைகுனிய வைக்கின்றன. சமீபத்தில் ஒரு நான்கு வயது சிறுமி 25 வயதுள்ள ஒருவரால் பலாத்காரம் செய்யப்பட்டு உயிருக்கு போராடி வருவது நம்மை மேலும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.