1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜனவரி 2018 (16:37 IST)

பாஜகவுடனான உறவை முறித்து கொண்ட சிவசேனா!

29 ஆண்டுகாலம் பாஜவின் கூட்டணி கட்சியாக இருந்த சிவசேனா, தற்போது வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

 
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா பாஜகவுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்து வருகிறது. தற்போது குஜராத் மாநிலத்தில் தேவேந்திர பட்நாவிஸ் தலைமையில் நடைபெற்று வரும் பாஜக ஆட்சியுடன் சிவசேனா கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
சமீப காலமாக சிவசேனா மோடியையும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இன்று நடைபெற்ற சிவசேனா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் உத்தவ் தாக்கரே தலைமையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
 
அதில், வரும் 2019ஆம் ஆண்டு சட்டசபை மற்றும் மக்களவை தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பாஜக, சிவசேனா இடையேயான 29 ஆண்டுகால கூட்டணி முடிவு வந்தது.