செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 29 செப்டம்பர் 2014 (17:36 IST)

மத்திய அமைச்சர் ஆனந்த் கீதே ராஜினாமா: பா.ஜ.க. - சிவசேனா கூட்டணி முறிவு எதிரொலி

பா.ஜ.க. - சிவசேனா இடையேயான கூட்டணி முறிந்ததை தொடர்ந்து, மத்திய அமைச்சர் பதவியிலிருந்து சிவசேனாவை சேர்ந்த ஆனந்த் கீதே ராஜினமா செய்கிறார்.
 
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர், ஆனந்த் கீதே தமது பதவியை ராஜினாமா செய்வார் என சிவசேனா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
ஆனந்த் கீதே மத்திய கனரக தொழில்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.