வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வியாழன், 27 நவம்பர் 2014 (14:35 IST)

15 வயது மகளை மூன்றாண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது

தன்னுடைய 15 வயது மகளை மூன்றாண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
 
குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரை சேர்ந்த 42 வயதுமிக்க தந்தை தன்னுடைய 15 வயது மகளை கடந்த மூன்றாண்டுகளாக தனது ஆசைக்கு இணங்க வைத்திருக்கிறார். இந்த தகவலை யாரிடமாவது சொன்னால் பெரும் பிரச்சனையாகும் என்று அவரை மிரட்டியுள்ளார். இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது. மேலும், இவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
 
இதனை கடந்த மூண்றாண்டுகளாக யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார். பொருமை தாங்காத அந்த சிறுமி தனக்கு நேர்ந்த அவலத்தை தாயிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
 
இதன் பேரில், அவர் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.