வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 28 ஜூலை 2016 (18:39 IST)

போதை கலாச்சாரத்தில் பள்ளி மாணவர்கள்: ஹூகா பேனா புது வரவு!

சில வாரங்களுக்கு முன்னர் சென்னையில் பல இடங்களில் பள்ளி மாணவர்களுக்கு போதை சாக்லெட் விற்றதாக நடந்த சோதனையில் போதை சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து தமிழக அரசு அதிரடி சோதனைகள் நடத்தியது.


 
 
இந்நிலையில் தற்போது ஐதராபாத் போன்ற நகரங்களில் ஹூகா பேனா என்னும் போதை பேனா விற்கப்பட்டு வரும் செய்தி வருகிறது. இதனை தொடர்ந்து அரசு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.
 
ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவன் ஒருவன் பேனாவை நுகர்ந்து பார்த்துக் கொண்டு இருந்துள்ளான். இதனால் சந்தேகமடைந்த ஆசிரியர்கள் அந்த மாணவனை பரிசோதித்தபோது, அந்த மாணவன் பயன்படுத்தியது போதை பேனா என்பது தெரியவந்தது.


 
 
இந்த போதை ஹூகா பேனா பரவலாகவும் எளிமையாகவும் மாணவர்களுக்கு கிடைப்பதாக சோதனையில் தெரியவந்துள்ளது. கல்லூரி, பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி மாணவிகளும் இதற்கு அடிமையாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.