வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 14 மே 2016 (19:57 IST)

தன்னுடன் உல்லாசமாக இருந்த அமைச்சர்கள், எம்.பி.க்களின் பட்டியலை ஒப்படைத்தார் சரிதா நாயர்

கேரளாவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது சரிதா நாயர் விவகாரம். பிரபல அரசியல் புள்ளிகள் தொடர்புடைய இந்த வழக்கில் தன்னுடன் உல்லாசமாக இருந்த அமைச்சர்கள், எம்.பிக்களின் பட்டியலை நேற்று விசாரணை கமிஷன் முன்பு சமர்பித்தார் சரிதா நாயர்.


 
 
கேரளாவில் சோலார் பேனல் அமைப்பதில் கோடிக்கணக்கில் பண மோசடி செய்தவர் தொழில் அதிபர் சரிதா நாயர். இதனை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிவராஜ் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
 
இந்த கமிஷன் கமிஷன் முன்பு ஆஜராகி வாக்கு மூலம் அளித்த சரிதா நாயர், சோலார் பேனல் விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் அமைச்சர்கள் பலருக்கும் பல கோடி பணம் லஞ்சமாக கொடுத்ததாக கூறியதோடு, முதல்வர் உம்மன்சாண்டி உள்பட சில அமைச்சர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறியிருந்தார். இதனால் மிகவும் பூதாகரமாக வெடித்தது இந்த விவகாரம்.
 
இது தொடர்பான ஆதாரங்களை சமர்பிக்க விசாரணை கமிஷன் தலைவர் நீதிபதி சிவராஜ் சரிதா நாயருக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து சரிதா நாயர் நேற்று விசாரணை கமிஷன் முன்னிலையில் ஆஜராகி தனது புகார் தொடர்பான ஆதாரங்களை ஒப்படைத்தார்.
 
அரசு விருந்தினர் மாளிகை, கிளிப் ஹவுஸ் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தன்னுடன் தங்கிய எம்.பி.க்கள், அமைச்சர்கள் ஆகியோர் தன்னுடன் உல்லாசமாக இருந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இவற்றின் ஆடியோ, வீடியோ தொடர்பான சி.டி.க்களையும் கமிஷன் முன்பு கொடுத்துள்ளேன் என சரிதா நாயர் கூறியுள்ளார்.