வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : ஞாயிறு, 28 ஜூன் 2015 (05:54 IST)

உடல்நலக் குறைவால் முலாயம் சிங் மருத்துமனையில் மீண்டும் அனுமதி

உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட, சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் லக்னோவில் உள்ள ஒரு மருத்துமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
 

 
சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ், வழக்கமாக மருத்துவ பரிசோதனை எடுத்துக் கொள்வார். கடந்த சில நாட்களுக்கு முன்பு குர்கானில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வழக்கமான பரிசோதனைகள் முடிந்தவுடன் வீடு திரும்பினார்.
 
இந்நிலையில், அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டார். இதனால், மீண்டும் அதே மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு, அங்கு மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. முலாயம் சிங் உடல் நலம் முன்னேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.
 
முலாயம் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்த அவரது கட்சியினர் மருத்துவமனை முன்பு குவிந்து வருகின்றனர். அவருக்கு முக்கிய நிர்வாகிகள் ஆறுதல் கூறி வருகின்றனர்.