வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 5 மே 2015 (21:20 IST)

சல்மான் கானுக்கு எதிரான வழக்கில் ஏப்ரல் 7 ஆம் தேதி தீர்ப்பு

போதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய வழக்கில் வியாழக்கிழமை (7.5.2015) தீர்ப்பளிக்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பை அவரை விட, அவரை நம்பி ரூ.200 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ள பாலிவுட் திரை உலகத்தினர்தான் அதிக ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.
 
கடந்த 2002ஆம் ஆண்டு சல்மான் கானின் கார் மோதி சாலையில் உறங்கிக் கொண்டிருந்த ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.
 
இந்த வழக்கின் தீர்ப்பு வரும் வியாழக்கிழமை அறிவிக்கப்பட உள்ளது. அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டால், அவரை நம்பி படங்களில் முதலீடு செய்துள்ள தயாரிப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.