கேரளாவில் சொகுசு மாளிகை கட்ட திட்டமிடுகிறார் சச்சின் டெண்டுல்கர்
சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் கேரளாவில் சொகுசு மாளிகை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளார்.
சச்சின்டெண்டுல்கர் சாதனைகளுக்கு சொந்தக்காரர். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து தனது திறமையால் சர்வதேச அளவில் தனி முத்திரை பதித்த சச்சின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
பல கோடிகளுக்கு அதிபதியான சச்சினுக்கு மும்பையில் பல கோடி ரூபாய் மதிப்புடைய சொகுசு பங்களா உள்ளன. கேரள மாநிலத்தின் மீது தனிப் பாசம் உடைய சச்சின் கேரளா பிளாஸ்டர்ஸ் என்ற கால்பந்து அணியின் சக உரிமையாளர் களில் ஒருவர்.
கேரளாவில் தனக்கு சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்று எண்ணிய அவர் மிக ஆடம்பரமான சொகுசு மாளிகை ஒன்றை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.