1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 15 செப்டம்பர் 2018 (08:05 IST)

மாயாவதி, மம்தாவுக்கு ஆர்.எஸ்.எஸ். அழைப்பு

டெல்லியில் வரும் 17ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கூட்டம் 3 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரரான மாயாவதி ஆகியோர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர்  அகிலேஷ் யாதவ் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் ராகுல்காந்தியும் கலந்து கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வரும் நிலையில் இந்த மாநாட்டில் பாஜகவுக்கு எதிரான ஒரு வலுவான கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.