1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 1 ஆகஸ்ட் 2015 (19:31 IST)

ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அரசு நிர்வாகத்தையும் நீதி அமைப்பையும் பலவீனப்படுத்துகின்றனர்: ராகுல் காந்தி

கல்வி அமைப்புகள் அரசு நிர்வாகம், நீதி அமைப்பு ஆகியவற்றை ஆர்எஸ்எஸ் அமைப்பினர்  பலவீனப்படுத்துகின்றனர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 
மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் உள்ள இந்திய திரைப்பட, டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் தலைவர் பொறுப்பில் இருந்து டி.வி. நடிகர் கஜிந்தர் சவுகானை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மாணவர்கள் நடத்திவரும் போராட்டத்தில் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.
 
அப்போது பேசிய ராகுல் காந்தி, "ஆர்எஸ்எஸ் அமைப்பினரும், அதன் திட்டங்களை வகுக்கும் இடத்திலுள்ள சிந்தனையாளர்களும் கல்வி நிறுவனங்களின் அந்தஸ்தை சீர்குலைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
கல்வி அமைப்புகள் மட்டுமல்லாது, அரசு நிர்வாகம், நீதி அமைப்பு ஆகியவற்றையும் பலவீனப்படுத்துகின்றனர்.
 
ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தங்களது கொள்கைகளை வளர்க்க முனைகின்றனர். ஆனால், அதை நீங்கள் விமர்சித்தால் உங்களை தேசவிரோதிகள் என்றும் இந்து விரோதிகள் என்று அழைப்பார்கள்" என்று  ராகுல் காந்தி கூறினார்.