வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (12:48 IST)

ஏடிஎம்-ல் சீரியல் நம்பர் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள்: மக்களே உஷார்!!

மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஏடிஎம் ஒன்றில் சீரியல் நம்பர் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


 
 
மத்திய பிரதேச மாநிலம் தமோ என்ற இடத்தில் உள்ள ஏடிஎம்-ல் பணமெடுத்த போது சீரியல் நம்பர் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள் வெளிவந்துள்ளது. அவை கள்ள நோட்டுகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 
 
பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்மில் இந்த சர்ச்சைக்குரிய 500 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதே பகுதியை சேர்ந்த மற்றொருவர் ஏடிஎம்மில் பணம் எடுத்த போதும் இதே போல் சீரியல் எண் இல்லாத 500 ரூபாய் நோட்டுகள் வந்துள்ளன. 
 
இவை கள்ள நோட்டுகளா அல்லது அச்சிடப்பட்டபோது ஏற்பட்ட தவறா என விசாரணை நடைபெற்று வருகிறது.