வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வெள்ளி, 2 டிசம்பர் 2016 (17:45 IST)

தொழிலதிபர் வீட்டில் ரூ.13,860 கோடி கருப்பு பணம் - குஜராத்தில் அதிர்ச்சி

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் மகேஷ் ஷா என்பவரிடம் கணக்கில் வராத பணம் ரூ.13,860 கோடி வருமான வரித்துறையினர் சோதனையில் சிக்கியது.


 

 
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் ரியல் எஸ்டேட் தொழில் அதிபார் மகேஷ் ஷா என்பவரிடம் கணக்கில் வராத ரூ.13,860 கோடி சிக்கியது. வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் மகேஷ் ஷாவிடம் இருந்து கோடி கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
 
கருப்பு பணத்தை ஒழிக்க கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். அதைத்தொடர்ந்து வங்கிகளில் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் வங்கி கணக்கில் டெபாசிட் செய்தால் அதற்கு வரி செலுத்த வேண்டும் மற்றும் அதற்கான கணக்கு சமர்பிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.
 
அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் ஆங்காங்கே பணம் மூட்டை மூட்டையாக தூக்கி வீசப்பட்டது. அது கருப்பு பணம் என்றும் கள்ள ரூபாய் நோட்டுகள் என்றும் கூறிவந்தனர்.
 
இந்நிலையில் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள ரியல் எஸ்டேட் தொழில் அதிபர் கணக்கில் வராத பணம் ரூ.13,860 கோடி வருமான வரித்துறையினர் சோதனையில் சிக்கியது.