1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: சனி, 7 நவம்பர் 2015 (05:43 IST)

ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்பளித்த நீதிபதிக்கு அடிஉதை

கடந்த காலத்தில் ஜெயலலிதாவுக்கு எதிராக ஊழல் வழக்கை விசாரணை நடத்திய நீதிபதியை மர்ம நப்ரகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டத்தில் உள்ள பட்டசோமனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற நீதிபதி சிவப்பா. இவர், கடந்த 1994 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர்.
 
அப்போது, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு எதிரான கலர் டி.வி. ஊழல் வழக்கில், அவரது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்தாத காரணத்தினால், ஜெயலலிதா சிறை சென்றார்.
 
இந்த நிலையில், நீதிபதி சிவப்பா வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் அவர் மீதும், அவர் மனைவி மீதும் திடீக் தாக்குதல் நடத்தினர். இதனால் நீதிபதி மைசூரிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறை தீவிர விசாரணையில் இறங்கியுள்ளது.