வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : சனி, 22 நவம்பர் 2014 (10:37 IST)

குடியரசு தின விழாவில் ஒபாமா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார்

குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பங்கேற்க உள்ளார்.
 
ஜனவரி மாதம் 26 ஆம் தேதி, நடை பெறவுள்ள குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சிறப்பிக்குமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு நரேந்திர மோடி அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார்.
 
இந்நிலையில், நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று குடியரசு தின விழாவில் அதிபர் ஒபாமா பங்கேற்கவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
இது குறித்து நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:-
 
"வரும் குடியரசு தின விழாவில் அதிபர் ஒபாமா பங்கேற்கிறார். இந்தியக் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் முதலாவது அமெரிக்க அதிபர் ஒபாமா.'' என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.