செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (14:03 IST)

சதானந்த கவுடா ராஜினாமா செய்யக் கோரி காங்கிரஸ் போராட்டம்

ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து சதானந்த கவுடா ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் பெங்களூரில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா நடிகை மைத்திரியைப் பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை சதானந்த கவுடாவின் மகன் மறுத்துள்ளார். இதுகுறித்து பேசிய சதானந்த கவுடா ‘இது தனக்கு எதிரான சதி‘ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் கார்த்திக் மீது  பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் ரயில்வே அமைச்சர் பதவியில் இருந்து சதானந்த கவுடா ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் பெங்களூரில் போராட்டம் நடத்திவருகின்றனர்.

நடிகை மைத்திரி, தன்னைத் திருமணம் செய்துவிட்டு தற்போது வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்திருப்பதாக மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் மீது குற்றஞ் சாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.