வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வியாழன், 26 பிப்ரவரி 2015 (12:27 IST)

பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாது - மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு

2015–16 ஆம் நிதி ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை, மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு நாடாளுமன்றத்தில தாக்கல் செய்து வருகிறார்.
 
இந்த ரயில்வே பட்ஜெட், நரேந்திர மோடி தலைமையிலான, பாஜக அரசின் முதல் முழுமையான ரயில்வே பட்ஜெட், மேலும் சுரேஷ் பிரபு தாக்கல் செய்யும் முதல் ரயில்வே பட்ஜெட்டும் ஆகும். ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து வருகிறார்.
 
இது குறித்து சுரேஷ், ரயில்வே துறைக்கு மக்களே உரிமையாளர்கள் என்று கூறிய அவர், பயணிகள் கட்டணம் உயர்த்தப்படாது என்றும், அடுத்த 5 ஆண்டுக்கு 8.5 லட்சம் கோடிக்கு முதலீடு செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.