வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வெள்ளி, 27 பிப்ரவரி 2015 (07:47 IST)

மேல்தட்டு மக்களுக்கு சாதகமான ரயில்வே பட்ஜெட்: ஆம் ஆத்மி கருத்து

ரயில்வே பட்ஜெட், குறைந்த அளவிலேயே பயணம் செய்கின்ற மேல்தட்டு மக்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது என்று ஆம் ஆத்மி கூறியுள்ளது.
 
2015-16 ஆம் ஆண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டை ரயிலவே அமைச்சர் சுரேஷ் பிரபு நேற்று தாக்கல் செய்தார்.
 
இந்த ரயில்வே பட்ஜெட் குறித்து ஆம் ஆத்மி கூறியிருப்பதாவது:-
 
மோடி தலைமையிலான அரசு இந்த ரயில்வே பட்ஜெட்டினை எதிர்கால வளர்ச்சிகளை எதிர்நோக்கி வடிவமைத்திருக்க வாய்ப்புகள் இருந்தும் அதனை தவறவிட்டுவிட்டது.
 
இந்த பட்ஜெட்டை பொறுத்தவரை ரயிலில் பயணிக்கும் நடுத்தர மக்களின் எதிர்ப்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யாமல், குறைந்த அளவிலேயே பயணம் செய்கின்ற மேல்தட்டு மக்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இவ்வாறு  தெரிவித்துள்ளது.