வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 10 ஜூலை 2019 (16:50 IST)

ராஜினாமா செய்தாலும்... ராகுலுக்கு டுவிட்டரில் எகிறிய மவுசு !

சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, மக்களவைத் தேர்தலில் படுதோல்வியை ஒட்டி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதற்கு அக்கட்சியில் அவரது தாய் சோனியா உட்பட யாருமே சம்மதிக்கவில்லை. அதனால் மற்ற மாநிலங்களில் முக்கிய பொறுப்புகளில் உள்ள காங்கிரஸ் தலைவர்களும் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்யமுன் வந்தனர்.
இந்நிலையில்  காங்கிரஸுல் அடுத்த தலைவர் யார் என்பது குறித்து இன்னும் முடிவாகாததால், தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர், இந்நிலையில் கட்சியில் உள்ள சீனியரை தலைவர்களாக தலைவரை தேர்தெடுப்பதா... இல்லை இளைஞரை தலைவராக தேர்ந்தெடுப்பதா என்பது இன்னும் முடிவாகவில்லை.
 
 இந்நிலையில் தேர்தல்  தோல்வியிக்கு அனைவரையும் பொறுப்பேற்கச் செய்வது, கட்சியைக் கட்டமைக்கவும் ராகுல் தீவிரமாக களமிறங்கியுள்ளதால் நேரு குடும்பத்தைச் சேராத ஒருவரை தலைவராக வர வேண்டும் என அவர் முடிவு செய்துள்ளார்.
 
இப்படியிருக்க.. சமூகவலைதளமான டுவிட்டரில் ராகுல்காந்தியை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1 கோடியை எட்டியுள்ளது.