1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : சனி, 29 நவம்பர் 2014 (11:40 IST)

வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட 11 பெண்கள் மீட்பு

வலுக்கட்டாயமாக  விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 11 பெண்களை காவல் துறையினர் மீட்டுள்ளனர்.
 
பெங்களூரு காவல் துறை ஆணையருக்கு டுவிட்டர் மூலமாக நேற்று ஒரு தகவலை மர்ம நபர் ஒருவர் அனுப்பியிருந்தார். அதில் விவேக் நகர், ஈஜிபுரா பகுதியிலும் விபச்சாரம் நடப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர், 11 பெண்களை மீட்டு அவர்களை கடத்தி வந்த கும்பலை கைது செய்துள்ளனர். இதில் 3 பெண்கள் கொல்கத்தாவையும், 3 பேர் ஆந்திராவையும், மூவர் மும்பையையும் மற்ற இருவர் கர்நாடகாவையும் சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
 
இதையடுத்து ஆள்கடத்தல், உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.