வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜனவரி 2019 (17:58 IST)

அம்மாடியோவ்....பிரதமர் நரேந்திர மோடி ஓவியம் ’எத்தனை ’ லட்சம் தெரியுமா..?

பிரதமர் நரேந்திர மோடி மிகச்சிறந்த நிர்வாகி என்று பலரும் கூறிவருகிறார்கள்.அவரது இமேஜ்தான்  கடந்த பாராளுமன்ற தேர்தலில் அலைமோதிக் கொண்டிருந்த பாஜகவை கரை சேர்த்தது.
இந்நிலையில் அதிக வெளிநாடுகளுகு சென்று முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு, பலநாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தி வருகிறார்.
 
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு தலைவர்கள் வழங்கிய பொருட்கள் ஏலம் விடப்படுகிறது.  மேலும் இது சம்பந்தமாக மத்திய கலாச்சார துறை அமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில் டெல்லிய்ல் உள்ள தேசிய் அருங்காட்சியகத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் ஏலத்தில் விடுவதற்காக வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த ஏலத்தின் மூலம் கிடைக்கும் தொகை கங்கை நதி தூய்மை திட்டத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதில் பல பொருட்கள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக மரத்தால் ஆன பைக்,ரூ. 40000 என்றும் , பிரதமர் மோடி இரயில் நிலையத்தில் நிற்கும் ஓவியமானது ரூ. 50000 என்று அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டது. 
 
இறுதியில் இவ்விரண்டு பொருட்களும் சேர்ந்து ரூ. 5 லட்சத்திற்கு விற்பனையானதாக தகவல் தெரிவிக்கின்றன.