வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha priya
Last Modified: சனி, 2 ஆகஸ்ட் 2014 (13:02 IST)

நரேந்திர மோடி நீண்ட ஆயுளுடன் வாழவேண்டி மனைவி பூஜை

குஜராத்தில் உள்ள கோவிலுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென், மோடி நீண்ட ஆயுளுடன் வாழவேண்டியும், அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் வெற்றி காணவும் பிரார்த்தனை செய்ததாக தெரிவித்தார். 
 
பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி யசோதா பென், பலன்பூர் அருகே உள்ள மகர்வாடா கிராமத்தின் வீரபத்ர மகராஜ் கோவிலுக்கு சென்றார்.
 
அங்கு பூஜை மேற்கொண்ட அவரிடம் செய்தியாளர்கள் பேசுகையில் அவர், 
தான் அந்தப் பகுதியில் ஆசிரியையாக பணிபுரிந்த போது அடிக்கடி இந்த கோவிலுக்கு வந்ததாகவும், தற்போது அவ்வாறு வர முடியாத சூழல் உள்ளதாகவும் தெரிவித்தார்.
 
மேலும்,  மோடி நீண்ட ஆயுளுடன் வாழவேண்டியும், அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் வெற்றி காணவும் பிரார்த்தனை செய்ததாக தெரிவித்த அவர் மோடி நாட்டு மக்களுக்கு சேவைப் புரியவும் வேண்டிகொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.