வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வெள்ளி, 8 ஜனவரி 2016 (17:32 IST)

ஜல்லிக்கட்டின் போது மாடுகளை துன்புறுத்தக் கூடாது : பிரகாஷ் ஜவடேகர்

ஜல்லிக்கட்டில் மாடுகளை துன்புறுத்தக் கூடாது : பிரகாஷ் ஜவடேகர்

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும்போது மாடுபிடி வீரர்கள் காளைகளை துன்புறுத்தக் கூடாது என்று கூறியுள்ளார்.


 

 
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைத்துள்ளது. மேலும் காட்சிப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து காளைகளை நீக்கப்படுவதாகவும், மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் எனவும் மத்திய அரசு சார்பாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியதற்கு மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் முக்கியமானவர். அவர் இதுபற்றி கூறும்போது “ ஜல்லிக்கட்டு நடை பெறும்போது முறையான பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதற்கு முன், காளைகளுக்கு உரிய மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டும். மேலும் மாடிபிடி வீரர்கள் காளைகளை துன்புறுத்தக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.