அரசியல்வாதிகள் பாலியல் தொல்லை: வீடியோ ஆதாரங்களை கொடுத்தார் சரிதா நாயர்
தனக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல்வாதிகளின் வீடியோ ஆதாரங்களை விசாரணை கமிஷனில் சரிதா நாயர் கொடுத்துள்ளார்.
கேரள மாநிலத்தில் சூரிய மின்சக்தி தகடுகள் வழங்குவதாக மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான சரிதா நாயர் பல அரசியல் கட்சித் தலைவர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறியிருந்தார்.
இந்த மோசடி குறித்து விசாரணை நடத்திவரும் நீதிபதி சிவராஜன் கமிஷன் அதற்கான ஆதாரங்களை வழங்க உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, சரிதா நாயர் ஒரு முத்திரையிடப்பட்ட கவரை விசாரணை கமிஷனிடம் கொடுத்தார்.
அந்த கவரில், தன்னை பாலியல் பலாத்காரம் செய்த அதிகாரமிக்க அரசியல் கட்சியினர் பற்றிய விவரங்களை தெரிவித்துள்ளார்.
மேலும், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரங்களை புதிய முத்திரையிட்ட கவரில் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், மேலும் சில ஆதாரங்களை ஒப்படைக்க காலஅவகாசம் கேட்டுள்ளார் என்றும் கூறப்படுகின்றது.