வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: திங்கள், 29 பிப்ரவரி 2016 (16:19 IST)

சிறுமியை கற்பழித்து வீடியோவும் எடுத்த போலீசார் : ஆந்திராவில் கொடூரம்

பதினேழு வயது சிறுமியை கற்பழித்ததோடு மட்டுமில்லாமல், வீடியோ எடுத்து அவரை மிரட்டிய மூன்று போலீசாரை பொது மக்கள் தாக்கிய சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள வீணவங்கா எனும் கிராமத்தில் ஒரு காவலர் பயிற்சி அகாடமி உள்ளது. அங்கு ராகேஷ்(18), அஞ்சய்யா(20), ஸ்ரீனிவாஸ்(21) ஆகிய மூன்று போலீசார் பயிற்சி பெற்று வந்தனர். அவர்கள் மூன்று பேரும் அந்த பகுதியில் வசிக்கும் ஒரு 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி காச்சப்பூர் என்ற இடத்திற்கு அழைத்துச் சென்று, மிரட்டி மூன்று பேரும் பாலியல் பலாத்காரம் செய்தனர். 
 
மேலும், அதை தங்களது செல்போனில் வீடியோவகவும் எடுத்தனர். இதுபற்றி வெளியே கூறினால், அந்த வீடியோவை வெளியே விட்டு விடுவோம் என்றும்,   தாங்கள் போலீசார் என்பதால், எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அந்த சிறுமி தான் கற்பழிக்கப்பட்டதை யாரிடமும் கூறவில்லை.
 
இதைப் பயன்படுத்தி அந்த மூன்று பேரும் அந்த சிறுமியை அடிக்கடி அந்த போலீஸ் அகாடமிக்கு வரவழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். பொறுமையிழந்த அந்த சிறுமி, அதை அவர்களிடம் பெற்றோர்களிடம் கூறிவிட்டார்.
 
இதைக் கேட்டு அதிர்ச்சியான அவர்கள், அந்த மூன்று பேரையும் கையும் களவுமாக பிடிக்க நினைத்தனர். அதனால், அவர்களுக்கு அந்த சிறுமி மூலம் போன் செய்து ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்தனர். உடனே அந்த மூன்று பேரும் ஆர்வமாக சிறுமியை பார்க்க அந்த இடத்திற்கு வந்தனர்.
 
அப்போது அங்கு காத்திருந்த கிராம மக்கள் அவர்களை சுற்றி வளைத்து தாக்கினர். அதன்பின் அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால் அவர்கள் மீதி உரிய நடவடிக்கை எடுக்காத போலீசார், காயமடைந்த அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். 
 
இதற்கிடையில் அவர்கள் செல்போனில் எடுத்த வீடியோ தொலைக்காட்சிகளில் வெளியானது. இதைக் கண்ட மகளிர் அமைப்பினர் கொதித்தெழுந்து, அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையின் முன் போராட்டம் நடத்தினர். திடீரெனெ அவர்கள், அந்த மூன்று பேர் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டுக்குள் நுழைந்தனர்.
 
அப்போது, அந்த மூன்று பேரும் பழச்சாறு குடித்தபடி ஹாயாக படுத்து இருந்தனர். இதைக் கண்ட அவர்கள், கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு ராஜ உபசாரம் நடக்கிறதா? என்று கேட்டு ஆவேசத்துடன் அவர்களை தாக்கினர். இதை சில தொலைக்காட்சி நிருபர்கள் வீடியோ எடுத்தனர். ஆனால் அந்த மூன்று பேரும் எங்களை படம் பிடிக்காதீர்கள் என்று கெஞ்சினர். அப்போது ஒரு பெண் தன்னுடைய செருப்பை கழற்றி அவர்களை அடித்தார். அதன்பின் போலீசார் விரைந்து வந்து மகளிர் அமைப்பினரை வெளியே அனுப்பினர்.
 
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட அந்த மூன்று போலீசார் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாரங்கல் டி.ஐ.ஜி கூறியுள்ளார்.