1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: வியாழன், 7 மே 2015 (07:23 IST)

வாட்ஸ்அப்பில் ராஜினாமா தகவலை அனுப்பிய காவல்துறை துணை ஆய்வாளர்

முதன்முறையாக, உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் தெஹாத் மாவட்டத்தில் காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர் தனது ராஜினாமாவை வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.
 
இது குறித்து கான்பூர் மண்டல ஐ.ஜி.யின் பொது மக்கள் தொடர்பு அதிகாரி கூறுகையில், "மூத்த அதிகாரிகளின் துன்புறுத்தல் மற்றும் அவமானப்படுத்தும் விசயங்களால் ரசூலாபாத் காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்ட வினோத் குமார் என்ற காவல்துறை துணை ஆய்வாளர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் " என்று கூறியுள்ளார்.
 
இது குறித்து விசாரணை செய்து, 24 மணிநேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி கான்பூர் தெஹாத் மாவட்ட சூப்பிரெண்டு சபாராஜிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.  அதன் பின்னரே நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.ஜி. கூறியுள்ளார்.
 
மேலும், இதுபோன்ற சமூக வலைதளத்தில் காவல் துறை அதிகாரி ஒருவர் ராஜினாமா செய்வது இதுவே முதல் முறை என அவர் தெரிவித்துள்ளார்.