1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 4 அக்டோபர் 2017 (21:41 IST)

போராடிய விவசாயிகள்: ஆடை களைத்து அவமான படுத்திய போலீஸார்!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் மாவட்ட நிர்வாக அலுவலகம் முன்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


 
 
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பண்டல்காண்டில் போராட்டம் நடத்திய விவசாயிகளின் ஆடைகளை களைய செய்த போலீசார் அவர்களை  உள்ளாடையுடன் அமர செய்து அவமான படுத்தியுள்ளனர் என தெரியவந்து உள்ளது. 
 
இதுதொடர்பான புகைப்படங்களை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இந்தப் பிரச்சனை தொடர்பாக மனித உரிமை ஆணையத்திடம் செல்லவிருப்பதாக காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
 
இவை அனைத்தும் காங்கிரஸ் கட்சியின் தூண்டுதலில் தான் நடந்துள்ளது என பாஜக குற்றம்சாட்டியது. அதேபோல் விவசாயிகள் கற்களை வீசி தங்களை காயப்படுத்தியதாக போலீஸ் தரப்பிலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.