வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 6 அக்டோபர் 2015 (20:08 IST)

பெங்களூர் கற்பழிப்புச் சம்பவம் : மூன்று பேர் கைது

பெங்களூரில் பணி முடித்து பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்த இருவரை காவல் துறை கைது செய்துள்ளது.


 
 
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
 
கடந்த 3 ஆம் தேதி தனது பணியை முடித்த அந்த இளம்பெண் இரவு 9.30 மணிக்கு பேருந்து மூலம் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அந்த பேருந்தில்  ஓட்டுநர் உள்பட மூன்று ஆண்கள் இருந்தனர். பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு பேருந்து சென்றதும், ஒதுக்குப்புறமான இடத்தை நோக்கி பேருந்தை ஓட்டுநர் ஓட்டிச் சென்றனர்.
 
இதனால் பதறிப்போன இளம்பெண்  கூக்குரலிடவே கத்தியை காட்டி மிரட்டிய இரு ஆண்கள், அவரை பேருந்திலேயே பாலியல் பலாத்காரம் செய்தனர்.
 
இது குறித்து அந்த பெண் அளித்த புகாரினைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட அந்த இளம்பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேரை இன்று பெங்களூர் காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களின் வேனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.