டெல்லி சட்டமன்றத் தேர்தலை உலகமே கவனித்துக் கொண்டிருக்கிறது - மோடி
டெல்லியில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், டெல்லி சட்டமன்ற தேர்தலை உலகமே கவனித்துகொண்டிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள டெல்லியை பாஜக சீரமைக்கும்.
டெல்லி மக்கள் வாக்களிக்களித்து இருக்காவிட்டால் நான் பிரதமர் ஆகியிருக்க முடியாது. ஆம் ஆத்மி பொறுப்பில் இருந்து தப்பி ஓடிவிட்டது. மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அந்த நம்பிக்கையை நாங்கள் காப்பாற்றுவோம்.
கடந்த முறையே நாங்கள் ஆட்சிக்கு வரும் வகையில் மக்கள் ஆதரவளித்தனர். ஆனால் 5 இடங்கள் குறைவாக இருந்ததால் ஆட்சி பொறுப்புக்கு வர முடியவில்லை என்று பேசினார்.