1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 21 மே 2015 (15:30 IST)

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 24 வது நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 24 வது நினைவு தினம் இன்று அனுசரிக்கபடுவதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி  அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
 

 
 இது தொடர்பாக சமூக வலைதளமான டுவிட்டரில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளதாவது:- “முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்திக்கு அவரது நினைவு நாளையொட்டி அஞ்சலி செலுத்திக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தியின்  நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர்  மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
 
இந்தியாவின் ஆறாவது பிரதமரும் மிக இளம் வயதில் பிரதமராக பதவி வகித்தவர் என்ற பெருமைக்கு சொந்தமான முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டிற்க்கு வந்தபோது தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்பத்தூரில் மே 21,1991 அன்று படுகொலை செய்யபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.