வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: வியாழன், 11 பிப்ரவரி 2016 (16:18 IST)

ஸிக்கா வைரஸை பார்த்து பயப்படும் மோடி: குஷ்பு தாக்கு

தாராபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளருமான குஷ்பு பிரதமர் நரேந்திர மோடியை கிண்டலடித்து தாக்கி பேசியுள்ளார்.


 
 
கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, தற்போது ஸிக்கா வைரஸ் பரவுவதால் வெளிநாடுகளுக்கு செல்ல தயங்குவதாக குஷ்பு கிண்டலாக கூறினார்.
 
மேலும் பேசிய குஷ்பு, காங்கிரஸ் அரசு 100 நாள் வேலைதிட்டத்தை கொண்டு வந்தது. அப்போது அதை விமர்சித்த பாஜக, தற்போது அதனை சிறந்த திட்டம் என செயல்படுத்தி வருகிறது.
 
தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள அரசுகள் மக்களுக்கான அரசுகளாக இல்லாமல், தங்கள் நலனுக்காக ஆட்சி நட்த்தி வருகின்றன. மேலும், காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், தமிழ்நாட்டில் ஆரம்ப பள்ளி முதல் கல்லூரி படிப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி வழங்கப்படும். மேலும் படித்தவர்கள் வாழ்வில் முன்னேற பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றார் குஷ்பு.