வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Annakannan
Last Updated : புதன், 20 ஆகஸ்ட் 2014 (11:25 IST)

திட்டக் குழுவுக்கு மாற்று அமைப்பு ஏற்படுத்த, மக்கள் கருத்துகள் வரவேற்பு

திட்டக் குழுவிற்கு மாற்றாக ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தார். அதன்படி, இந்தப் புதிய அமைப்பு எவ்வாறு இருக்கவேண்டும், அதன் செயல்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்ற பொதுமக்களின் கருத்துகள் வரவேற்கப்படுகின்றன.
 
இதற்கான அறிவிப்பை பிரதமர் வெளியிட்டுள்ளார். இதற்காக http://mygov.nic.in என்ற வலைத்தளத்தில் சுதந்திரமான கருத்துக் களம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் தங்களது கருத்துகளைப் பதிவுசெய்யலாம்.
 
"ஒரு புது அமைப்பை உருவாக்க உள்ளோம். அது 21ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தியாவின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று நம்புகிறோம். மேலும், அது மாநிலங்களின் பங்களிப்பை வலுப்படுத்தும். கருத்துகள் வந்து குவியட்டும்" என்று பிரதமர் கூறியுள்ளார்.