வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 7 டிசம்பர் 2018 (10:29 IST)

பெட்ரோல், டீசல் விலைக் குறைவு – மக்கள் மகிழ்ச்சி

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த பெட்ரோல், டீசல் விலை குறைந்துள்ளது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் உயர்வு, அமெரிகக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் விலை வீழ்ச்சி ஆகியக் காரணங்களால் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் விற்பனை ஆனது. கிட்டத்தட்ட பெட்ரோல் விலை 90 ருபாயை நெருங்கியது. டீசல் விலை 85 ரூ வை நெருங்கியது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் துன்பத்தை அனுபவித்தனர். இதனால் லாரிகளின் வாடகையும் உயர்ந்தது. இன்னும் சில அத்யாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில் வர்த்தகப் போர் மற்றும் இன்னும் பிறக் காரணங்களால் கச்சா எண்ணெய் விலைக் குறைய ஆரம்பித்துள்ளது. இந்த விலைக்குறைவால் உள் நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து வந்தன. தற்போது எட்டு மாதங்க ளுக்கு முன்பிருந்த விலை யில் பெட்ரோல், டீசல் விற்பனை ஆகின்றன.

கடந்த வாரங்களில் 12 ரூபாய் வரைக் குறைந்து சென்னையில் தற்போது பெட்ரோல் ரூ. 74.41-க்கும், டீசல் 70.09-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.