1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 16 அக்டோபர் 2014 (14:12 IST)

இந்தியாவுக்குள் எங்கு இடம்பெயர்ந்தாலும் மொபைல் எண்ணை மாற்றத் தேவையில்லை

இந்தியாவுக்குள் மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்ந்து வாழ்வோரின் வசதிக்காக மத்திய தொலைத் தொடர்புத்துறை ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.
 
இனி மாநிலம் மாறினாலும் வாடிக்கையாளர்கள் தங்களின் தொடர்பு எண்ணை மாற்றத் தேவையில்லை. ஏற்கெனவே பயன்படுத்திய நம்பரையே பயன்படுத்திக் கொள்ளலாம். வரும் மார்ச் மாதம் 31 க்குள் இந்த வசதி நடைமுறைக்கு வரும்.
 
செல்போன் வாடிக்கையாளர்கள் பெருகி வரும் நிலையில், முழுமையான ‘மொபைல் நம்பர் போர்டபிலிட்டி’ வசதியை வழங்க தொலைத் தொடர்புத்துறை முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் செய்துள்ள சிபாரிசை, தொலைத் தொடர்பு கமிஷன் ஏற்றுக்கொண்டுள்ளது.
 
செல்போன் வாடிக்கையாளர்கள் செல்போன் எண்ணை மாற்றிக்கொள்ளாமல் சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்வது ஏற்கெனவே வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.