வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 9 அக்டோபர் 2015 (12:52 IST)

பாகிஸ்தான் பாடகர் என்பதால் ’குலாம் அலி’யின் நிகழ்ச்சியை நிறுத்திய சிவசேனா

பாகிஸ்தான் பாடகர் என்பதால் புகழ்பெற்ற கஜல் பாடகர் குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை சிவசேனா தடுத்தி நிறுத்தியுள்ளது.
 

 
பாகிஸ்தானைச் சேர்ந்த புகழ்பெற்ற கஜல் பாடகர் குலாம் அலி (74). இவர் இந்திய சினிமாக்களிலும் பாடியுள்ளார். அவருக்கென்று பாகிஸ்தானிலும், இந்தியாவின் வட மாநிலங்களிலும் தனி ரசிகர் கூட்டமே உண்டு.
 
அந்த வகையில், மும்பையின் சண்முகானந்தா ஹாலில் வெள்ளிக் கிழமையன்று, குலாம் அலியின் கஜல் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மும்பை ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர் பார்த்திருந்தனர்.
 
இந்நிலையில் சிவசேனா, வழக்கம்போல பாகிஸ்தான் எதிர்ப்பு - இஸ்லாமிய எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்தது. பாகிஸ்தான் பாடகரான குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை, மும்பையில் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தது.
 
இது குலாம் அலியின் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. இதனால், குலாம் அலியின் இசை நிகழ்ச்சியை, அதன் ஏற்பாட்டாளர்கள் தற்போது ரத்து செய்துள்ளனர்.

ஆனால், இதற்கு முன்பு பலமுறை குலாம் அலி மும்பையில் இசை நிகழ்ச்சி நடத்தியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.