வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Updated : சனி, 26 ஜூலை 2014 (13:35 IST)

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பல்லன்வல்லா என்ற இடத்தில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது.
 
நேற்று இரவு 10:10 மணிக்கு பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலை அடுத்து இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. இந்த துப்பாக்கி சண்டை சுமார் 5 மணி நேரம் நீடித்துள்ளது. இந்திய ராணுவ தரப்பில் எந்த ஒரு சேதமும் இல்லை என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
 
தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் விதமாக இருதரப்பு போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது என்று ராணுவம் மற்றும் உளவுத்துறை கூறியுள்ளது.