வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 11 டிசம்பர் 2017 (14:09 IST)

பத்மாவதி, முத்தலாக் குறித்த கேள்விகள்; சர்ச்சையை ஏற்படுத்திய தேர்வு தாள்

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரளாற்று தேர்வு கேள்வி தாளில் பத்மாவதி, முத்தலாக குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாற்று தேர்வு தாளில் பத்மாவதி, முத்தலாக் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. ஜோஹர் பாரம்பரியம் என்ன சொல்கிறது? அலவுதீன் கில்ஜி காலத்தில், ராணி பத்மாவதியின் ஜோஹர் குறித்து விவரிக்கவும் என கேள்விகளை கேட்கப்பட்டுள்ளது. 
 
சர்ச்சைக்குரிய முத்தலாக் குறித்த கேள்வியும் இடம்பெற்றுள்ளது. மத்திய கால இந்தியாவில் சமூகம் மற்றும் கலாச்சாரம் குறித்த கேள்விகளும் சுல்தானிய ஆட்சியில் முஸ்லிம் பெண்களின் நிலை குறித்த கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது. 
 
இதுகுறித்து இடைக்கால வரலாற்று துறையின் உதவி பேராசிரியர் ராஜீவ் ஸ்ரீவாஸ்தா கூறியதாவது:-
 
நீங்கள் இடைக்கால வரலாறு மற்றும் இஸ்லாமிய வரலாற்றை கற்றுக்கொள்வதன் மூலம் தானாகவே பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக மாறும் என கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற கேள்விகள் கேட்கப்பட்டது சரிதான் என கூறியுள்ளார்.