வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : திங்கள், 31 ஆகஸ்ட் 2015 (05:08 IST)

பட்டேல் சமுகப் போராட்டம் நாடு முழுமைக்கும் பரவும்: ஹார்திக் படேல் அதிரடி தகவல்

27 கோடி பட்டேல் சமுகத்தினரை  ஒருங்கிணைத்து, இந்தியா முழுமைக்கும் போராட்டம் விரிவுபடுத்தப்படும் என்று படேல் சமூக ஒருங்கிணைப்பாளர் ஹார்திக் படேல் கருத்து தெரிவித்துள்ளார்.
 

\
இது குறித்து, டெல்லியில், படேல் சமுக ஒருங்கிணைப்பாளர் ஹார்திக் படேல்  செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
இட ஒதுக்கீடு கேட்டு நாங்கள் நடத்தும் போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு உள்ளது. இதனால் இந்த போராட்டம் நிச்சயம் வெல்லும். இந்த போராட்டம் மாரத்தான் ஓட்டம் போன்றதால், இது முடிவடைய சுமார் 2 ஆண்டுகள்  வரை கூட ஆகலாம்.
 
இதற்காக, பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த 27 கோடி பேரை ஒருங்கிணைத்து வருகின்றோம். மேலும், இந்த போராட்டத்தை இந்தியா முழுமைக்கும் விரிவுபடுத்த உள்ளோம்.
 
ஜாதிவாரி இடஒதுக்கீடு அளிப்பதால், இந்தியா 60 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டது. இதுவே, இந்தியா வல்லரசாவும் தடையாக உள்ளது.
 
இந்தியாவில் உள்ள மொத்தம் 182 ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அவற்றில் 4 அல்லது 5 ஜாதிகள் மட்டுமே குஜராத்தில் உள்ளன. மீதி, அனைத்து சமூகத்தைச் சேர்ந்த ஏழைகளுக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றார்.