வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: திங்கள், 16 மே 2016 (11:01 IST)

கேரள சட்டசபை தேர்தலில் ஸ்ரீசாந்த், உம்மன் சாண்டி, சசிதரூர் வாக்களிப்பு

இன்று தமிழகம் மட்டுமல்லாமல் புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்ற தேர்தலுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
 

 
கேரளத்தில் உள்ள 140 தொகுதிகளிலும் நடைபெறும் இத்தேர்தலில் 1203 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்கள் 109 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 2.61 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
 
இந்நிலையில், கேரள மாநில முதலமைச்சர் உம்மன் சாண்டி, கோட்டயத்தில் தனது வாக்கினை செலுத்தினார். அதேபோல காங்கிரஸ் தலைவர் சசிதரூர் திருவனந்தபுரத்தில் தனது வாக்கினை செலுத்தினார்.
 
பாஜக வேட்பாளரும், கிரிக்கெட் வீரருமான ஸ்ரீசாந்த் கொச்சியில் உள்ள வாக்குச்சாவடியிலும், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களுல் ஒருவருமான ஏ.கே.அந்தோனி திருவனந்தபுரத்திலும் வாக்களித்தனர்.

11 மணி நிலவரப்படி 28.46 சதவீத வாக்குகள் பதிவாயின.