1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 28 ஜூலை 2015 (12:46 IST)

10,000 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு உத்தரவு

வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ள காரணத்தால் வெளிநாடுகளில் இருந்து 10,000 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
அத்தியாவசிய சமையல் பொருளாகிய வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இதன்படி, தலைநகர் டெல்லியில் வெங்காயத்தின் விலை கிலோ 40 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இது குறித்து, டெல்லியில் மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்ளிடம் கூறுகையில், "விலை உயர்வை கட்டுப்படுத்தும் வகையில் பாகிஸ்தான், சீனா, எகிப்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து 10,000 டன் வெங்காயம் இறக்குமதி செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது" என்று தெரிவித்தார்.