செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 14 ஆகஸ்ட் 2015 (05:29 IST)

ஆகஸ்ட் 28ஆம் தேதி: ஓணம் பண்டிகை: சென்னை மாவட்டம் முழுக்க விடுமுறை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளர்.
 

 
இது குறித்து, சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, ஆகஸ்ட் 28ஆம் தேதி சென்னையில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறைக்கு பதில் செப்டம்பர் 19ஆம் தேதி பணி நாளாக செயல்படும்.
 
ஆனால், அவசர அலுவல்களை கவனிக்கும் வகையில், கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் செயல்படும் என்று தெரிவித்துள்ளார்.
 
ஐப்பசி திருவோண நட்சத்திரத்தில் கொண்டாடப்படுவது ஓணம். சங்ககால ஏடுகளில் விஷ்ணுவின் பிறந்த நாளாகவும் வாமணன் அவதரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், கேரளாவில் ஓணம் பண்டிகையை மிகச் சிறப்பாக கொண்டாடுவார்கள். 

கேரளாவில் ஓணம் பண்டிகையை மிகச் சிறப்பாக கொண்டாடும் அதே வேளையில், சென்னையில் அதிக அளவில் உள்ள கேரள மக்கள் ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.