1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 4 ஜூலை 2015 (20:07 IST)

அண்ணனை மணந்த நர்ஸ்; பெற்றோர் கண்ணீர் விட்டு அழுதும் செல்ல மறுப்பு

அண்ணனை காதலித்து மணந்த நர்ஸ், பெற்றோர் கண்ணீர் விட்டு அழுதும் அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார்.
 
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டம் ஜாகேரி பாஸ்கல் கிராமத்தை சேர்ந்தவர் ஜெபமாலை மேரி என்பவர் தனியார் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த அண்ணன் உறவு முறையான ஜேசுதாஸ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
 
இவர்களின் காதலுக்கு இரு தரப்பை சேர்ந்த உறவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கடந்த மாதம் 13ஆம் தேதி பணிக்குச் சென்ற ஜெபமாலை மேரி, மாலை வெகுநேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை. அதே வேளை ஜேசுதாசும் காணாமல் போயிருந்தார்.
 
இதனால் சந்தேகமடைந்த ஜெபமாலை மேரியின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 2 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் அவர்களின் ஆய்வு செய்தபோது அவர்கள் பெங்களூரு அத்திபெலே பகுதியில் இருப்பது தெரியவந்தது.
 
இதையடுத்து காவல் துறையினர் ஒரு வீட்டில் தங்கியிருந்த ஜெபமாலை மேரியையும், ஜேசுதாசையும் பிடித்தனர். பிறகு இருவரின் பெற்றோர்களை அழைத்து காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
 
அப்போது ஜெபமாலை மேரியின் பெற்றோர் தங்களுடன் வந்துவிடும்படி கண்ணீர் விட்டு கெஞ்சினார்கள். ஆனால், ஜெபமாலை மேரி, தனது காதல் கணவருடன் செல்வதாக உறுதியாக கூறிவிட்டார். இதையடுத்து காவல் துறையினர் ஜெபமாலை மேரியை ஜேசுதாசுடன் அனுப்பி வைத்தனர்.