1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Geetha Priya
Last Modified: புதன், 30 ஜூலை 2014 (14:54 IST)

பெங்களூருவில் மேலும் ஒரு 7 வயது சிறுமி பலாத்காரம்

பெங்களூருவில் மேலும் ஒரு 7 வயது பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
பெங்களூருவில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் சில நாட்களுக்கு முன் 6 வயது சிறுமி பாலியல் கொடுமைக்கு ஆளானாள். இச்சம்பவம் நாடெங்கும் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், அப்பள்ளியின்  ஸ்கேடிங் பயிற்சியாளர் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
இவ்வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தெற்கு பெங்களூருவில் மேலும் ஒரு 7 வயது பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு பள்ளி ஊழியரின் 28 வயது மகன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.