1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 26 செப்டம்பர் 2014 (15:08 IST)

கலைஞர் டி.வி.க்கும் எங்களும் தொடர்பு இல்லை: ஆ.ராசா, கனிமொழி

ரூ.200 கோடி பணப் பரிவர்த்தனை நடந்தபோது, கலைஞர் டி.வி.க்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
 
2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டின்போது, கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி வழங்கப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பான வழக்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
 
இந்த வழக்கின் விசாரணை இன்று (26 ஆம் தேதி) நடந்தது. அப்போது, கலைஞர் டி.வி.க்கு ரூ.200 கோடி பணப் பரிவர்த்தனையில் கூறப்படும் குற்றச்சாற்றுக்கு ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர்.
 
ஆ.ராசா கூறுகையில், ''கலைஞர் தொலைக்காட்சிக்கும், எனக்கும் எந்த தொடர்பும் இல்லை'' எனக் கூறினார்.
 
''பணப் பரிவர்த்தனை நடந்ததாக கூறப்படும்போது நான் கலைஞர் டி.வி.யில் எந்த பதவியிலும் இல்லை. கலைஞர் டி.வி. பங்குகளைளை சினியுக் பிலிம்சுக்கு விற்பதற்கான கூட்டத்திலும் நான் பங்கேற்கவில்லை. கலைஞர் டி.வி. இயக்குநரக கூட்டத்தில் 3 முறை மட்டுமே பங்கேற்றுள்ளேன்'' என கனிமொழி கூறினார்.