செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 6 அக்டோபர் 2015 (21:44 IST)

பாஜாக மீண்டும் மன்னராட்சியை கொண்டி வர முயற்சிக்கிறது : நிதிஷ்குமார் தாக்கு

மீண்டும் மன்னராட்சியை கொண்டி வர பாஜாக முயற்சிக்கிறது என்று நிதிஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.


 

 
பீகார் சட்டமன்ற தேர்தலையொட்டி, நிதிஷ்குமார் பல்வேறு தொகுதிகளில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் “மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை பாதுகாப்பதற்காகவும், பிரிவினைவாதத்தை வளர்க்கும் மதவாத சக்திகளை தோற்கடிப்பதற்காகவும் நாங்கள் மெகா கூட்டணி அமைத்துள்ளோம்.” என்றார். 
 
மேலும் “பீகாரில் மெகா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் காட்டாட்சி தான் நடைபெறும் என்ற பா.ஜ.க.,வின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த அவர், குற்றச்செயல்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் தரவரிசையில் பீகார் 22-வது இடத்தில் உள்ளது எனறும், பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் தான் முன்னிலையில் உள்ளது என்றும் கூறினார்.