1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 16 செப்டம்பர் 2014 (12:22 IST)

நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை முடிவு சி.ஐ.டி அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனை அறிக்கையை விக்டோரியா மருத்துவமனை மருத்துவர்கள் சி.ஐ.டி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் நெருக்கமாக இருப்பது போன்ற காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவரது முன்னாள் பெண் சீடர் ஆர்த்தி ராவ், நித்யானந்தா மீது கற்பழிப்பு புகார் கொடுத்திருந்தார். இந்த வழக்கு விசாரணை சி.ஐ.டி. பிரிவுக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், நித்யானந்தாவிற்கு ஆண்மை பரிசோதனை செய்ய ராமநகர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 8 ஆம் தேதி பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் நித்யானந்தாவிற்கு 7 பேர் கொண்ட மருத்துவ குழு சுமார் 5½ மணி நேரம் ஆண்மை பரிசோதனை செய்தனர்.

ஆண்மை பரிசோதனை செய்யப்பட்ட அறிக்கையை சி.ஐ.டி அதிகாரிகளிடம், மருத்துவர் துர்கன்னா வழங்கினார். ஆனால் அந்த அறிக்கையைப் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க மருத்துவர் துர்கன்னா மறுத்து விட்டார்.