வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: புதன், 17 செப்டம்பர் 2014 (16:57 IST)

6 வயது சிறுவனுக்குரிய உடல் வளர்ச்சியிலே இருக்கிறேன்: நித்யானந்தா நோட்டீஸ்

நித்யானந்தா தான் 6 வயது சிறுவனுக்குரிய உடல் வளர்ச்சியிலே இருக்கிறேன் என்று கூறி, அவருக்க ஆண்மை பரிசோதனை மேற்கொண்ட மருத்துவமனைக்கும் கர்நாடக சி.ஐ.டி காவல் துறையினருக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

கர்நாடக சி.ஐ, டி காவல் துறையினருக்கும், ஆண்மை பரிசோதனை மேற்கொண்ட விக்டோரியா மருத்துவமனைக்கும் தனது வழக்கறிஞர் தனஞ்செய் மூலமாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

''நித்யானந்தாவாகிய நான் இந்தியாவில் பெரும்பான்மையாக‌ வாழும் இந்து மக்கள் பெரிதும் மதிக்கும் சாமியாராக இருக்கிறேன். உலகம் முழுவதும் இந்து மதத்தின் பெருமைகளை பறைச்சாற்றி வரும் என்னை ஆண்மை பரிசோதனை என்ற பேரில், கர்நாடக சிஐடி காவல்துறையினரும் மருத்துவர்களும் அவமதித்துவிட்டனர்.

நான் ஒரு தெய்வப்பிறவி. 6 வயது சிறுவனுக்குரிய உடல் வளர்ச்சியிலே இருக்கிறேன். ஆண்மை பரிசோதனையின் போது உடைகளை களையச் சொல்லி கட்டாயப்படுத்தினர்.

மேலும் தனி அறையில் அடைத்து ஆபாசப்படம் பார்க்கச் சொல்லி கட்டாயப்படுத்தினர். இதற்கு நான் சம்மதிக்காத போது காவல் துறையினரும் மருத்துவர்களும் என்னை மிரட்டி கட்டாயப்படுத்தினர்.

அத்துடன், தகாத முறையிலும் இயற்கைக்கு ஒவ்வாத செயலிலும் ஈடுபடும்படி என்னை வற்புறுத்தினர். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறேன். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் உரிய பதில் அளிக்க வேண்டும்“ என்று கூறதப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு நித்யானந்தாவின் சீடர் ஆர்த்தி ராவ், நித்யானந்தா மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தார். எனவே அவருக்கு ஆண்மை பரிசோதனை நடத்த உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், நித்யானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை மேற்கொண்ட விக்டோரியா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் துர்கண்ணா நித்யானந்தாவின் பரிசோதனை முடிவுகளை கர்நாடக சிஐடி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.